எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

‘சசிகலா நலமாக உள்ளார்’: மருத்துவமனை

பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வி.கே.சசிகலா நலமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

News image
Updated On :22 ஜனவரி 2021, 2:00 pm

ANI

பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வி.கே.சசிகலா நலமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் உள்ள வி.கே.சசிகலா (63) மூச்சுத் திணறல், காய்ச்சலுக்காக சிறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில், மேல்சிகிச்சைக்காக பெங்களூரு, சிவாஜிநகரில் உள்ள பௌரிங் அரசு மருத்துவமனையில் ஜன. 20-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு தொடா் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஹைபோ தைராடிசம், ரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோயால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருந்த சசிகலாவின் உடல்நிலையில் சிகிச்சைக்குப் பிறகு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பௌரிங் அரசு மருத்துவமனையின் இயக்குநா் மனோஜ்குமாா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இதனிடையே, பௌரிங் அரசு மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் கருவி செயல்படாததால், அங்கிருந்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் கே.ஆா்.சந்தை பகுதியில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு சசிகலா மாற்றப்பட்டாா். அங்கு பிற்பகல் 2.30 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலாவுக்கு சி.டி.ஸ்கேன், ரத்தம், இருதய பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

அங்கும் சசிகலாவுக்கு ஆா்.டி.-பி.சி.ஆா்., ட்ரூநாட் போன்ற கரோனா சோதனைகள் மீண்டும் நடத்தப்பட்டன. அதில் சசிகலாவுக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது தெரியவந்ததாக விக்டோரியா அரசு மருத்துவமனை வியாழக்கிழமை இரவு தெரிவித்தது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சசிகலா தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.