18 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்: தமிழக அரசு

தமிழகத்தில் 18 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
18 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்
18 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்

தமிழகத்தில் 18 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து வெளியான அறிவிப்பில்,

சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த சீத்தாலட்சுமி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை இணை ஆணையராகவும், காஞ்சிபுரம் ஆட்சியராக இருந்த மகேஷ்வரி ரவிக்குமார், வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிறப்பு செயலாக்கத்துறையின் முதன்மை செயலாளராக விபு நாயர், சமூக சீர்திருத்தத்துறை முதன்மைச் செயலாளராக மங்கத் ராம் சர்மா, தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக கமல்கிஷோரை நியமித்து உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் தென்காசி மாவட்ட ஆட்சியராக கோபால சுந்தரராஜ், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக சந்திரகலா ஆகியோரை நியமனம் செய்து உத்தரடவிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com