காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

தம்மம்பட்டியில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி

தம்மம்பட்டியில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

News image
தம்மம்பட்டியில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி
Updated On :15 மார்ச் 2021, 1:04 pm

DIN

தம்மம்பட்டியில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

கெங்கவல்லி தேர்தல் நடத்தும் அலுவலர் அமுதன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் அறிவுறுத்தல்படி, தம்மம்பட்டியில் திங்கள்கிழமை மாலை சட்டமன்ற தேர்தல் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தம்மம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ராஜ்குமார், காவல் உதவி ஆய்வாளர் இராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் கெங்கவல்லி வருவாய் ஆய்வாளர் கனிமொழி துவக்கி வைத்தார். பேரணி, தம்மம்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்திலிருந்து அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி வரை சென்று திரும்பியது.

பேரணியின்போது, பொதுமக்களிடம், வருகிற சட்டமன்ற தேர்தலில் அனைவரும் தவறாது வாக்களிக்கவேண்டும் என்றும்,  100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.

பேரணியில் தம்மம்பட்டி பகுதியிலுள்ள கிராம நிர்வாக அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வருவாய்த்துறையினர் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.