டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

தமிழகத்தில் 21,289 ரெளடிகள் மீது நடவடிக்கை

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி இதுவரை 21,289 ரெளடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

News image
கோப்புப்படம்
Updated On :17 மார்ச் 2021, 3:18 pm

DIN

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி இதுவரை 21,289 ரெளடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காவல்துறை எடுத்து வருகிறது. 

இதுவரை 21,289 ரெளடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில், 732 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

18,183 பேரிடம் நன்னடத்தை உறுதி மொழி பத்திரத்தில் கையொப்பம் வாங்கப்பட்டுள்ளது. பிடியாணை உள்ள 14,343 பேரை தனிப்படை அமைத்து கைது செய்துள்ளனர்.

மேலும், தமிழகத்தில் இதுவரை 18,593 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.