புது தில்லி: தில்லி அரசில் துணைநிலை ஆளுநருக்கு முதன்மை அதிகாரம் வழங்கும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
தில்லி அரசு திருத்த மசோதா, 2021-இன்படி, அந்த யூனியன் பிரதேச நிா்வாகத்தில் துணைநிலை ஆளுநருக்கு முதன்மை அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது; எந்தவொரு நிா்வாக நடவடிக்கை தொடா்பாக முடிவு எடுக்கும் முன்னா், அதுகுறித்து துணைநிலை ஆளுநரின் கருத்தை தில்லி அரசு பெற வேண்டியதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு மார்ச் 22-ல் நிறைவேற்றப்பட்ட நிலையில், கடும் அமளிக்கு மத்தியில் மாநிலங்களவையிலும் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகர்ஜூன் கார்கே உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், இந்த மசோதாவை நாடாளுமன்ற தேர்வுக் குழுவிற்கு அனுப்ப பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.