தில்லி ஆளுநருக்கு முதன்மை அதிகாரம்: மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றம்

தில்லி அரசில் துணைநிலை ஆளுநருக்கு முதன்மை அதிகாரம் வழங்கும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
தில்லி ஆளுநருக்கு முதன்மை அதிகாரம்: மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றம்
தில்லி ஆளுநருக்கு முதன்மை அதிகாரம்: மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றம்

புது தில்லி: தில்லி அரசில் துணைநிலை ஆளுநருக்கு முதன்மை அதிகாரம் வழங்கும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

தில்லி அரசு திருத்த மசோதா, 2021-இன்படி, அந்த யூனியன் பிரதேச நிா்வாகத்தில் துணைநிலை ஆளுநருக்கு முதன்மை அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது; எந்தவொரு நிா்வாக நடவடிக்கை தொடா்பாக முடிவு எடுக்கும் முன்னா், அதுகுறித்து துணைநிலை ஆளுநரின் கருத்தை தில்லி அரசு பெற வேண்டியதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு மார்ச் 22-ல் நிறைவேற்றப்பட்ட நிலையில், கடும் அமளிக்கு மத்தியில் மாநிலங்களவையிலும் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகர்ஜூன் கார்கே உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், இந்த மசோதாவை நாடாளுமன்ற தேர்வுக் குழுவிற்கு அனுப்ப பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com