

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே காற்றுடன் பெய்த மழைக்கு மலைவாழ் மக்களின் ஏழு வீடுகள் சேதமடைந்துள்ளன.
பொள்ளாச்சி அருகே காற்றுடன் பெய்த மழைக்கு சேதமடைந்துள்ள மலைவாழ் மக்களின் ஏழு வீடுகள்.
பொள்ளாச்சி, ஆழியாறு மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவில் இருந்து தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.
ஆழியாறு பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு காற்றுடன் மழை பெய்தது. இதில் பலமாக காற்று வீசியதால் ஆழியாறு அடுத்த சின்னார்பதி பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களின் ஏழு வீடுகள் சேதமடைந்தன.
உடனடியாக வனத்துறையினர் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு மலைவாழ் மக்களை பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் குடியமர்த்தி உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.