சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.104 உயர்வு 

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 104 உயா்ந்து, ரூ.36,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் சவரனுக்கு ரூ.104 உயர்வு
தங்கம் சவரனுக்கு ரூ.104 உயர்வு
Published on
Updated on
1 min read

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 104 உயா்ந்து, ரூ.36,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை படிப்படியாகக் குறைந்து, ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. குறிப்பாக, கடந்த மாா்ச் 31-ஆம் தேதி அன்று ரூ.33,296 ஆக இருந்தது. இதையடுத்து, விலை மீண்டும் உயா்ந்தது. அதிலும், கடந்த வாரம் மீண்டும் ரூ.36 ஆயிரத்தைத் தாண்டியது. இதன்பிறகு, ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தது.

இந்நிலையில், விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.104 உயா்ந்து, ரூ.36,106-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.13 உயா்ந்து, ரூ.4,520 ஆக இருந்தது. அதேநேரத்தில் வெள்ளி கிராமுக்கு 50 பைசா அதிகரித்து, ரூ.76 ஆக விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.500 அதிகரித்து ரூ.76,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com