தமிழகத்தில் 8 காவல் துணை கண்காணிப்பாளர்களை பணியிடமாற்றம் செய்து காவல்துறை தலைவர் திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
பணியிடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளின் பட்டியல்:
கள்ளக்குறிச்சி பொருளாதார குற்றப்பிரிவு-2 டிஎஸ்பியாக ராதாகிருஷ்ணன், எழும்பூர் ரயில்வே டிஎஸ்பியாக அன்பரசன், சென்னை கடலோர பாதுகாப்பு குழுமம் டிஎஸ்பியாக வேல்முருகன், சென்னை சமூக நீதி, மனித உரிமை ஆணைய டிஎஸ்பியாக கோவிந்தராஜூ நியமனம்.
காஞ்சிபுரம் சரக காவலர் பயிற்சி மைய டிஎஸ்பியாக திருநாவுக்கரசு, பெரம்பலூர் சமூக நீதி, மனித உரிமை ஆணைய டிஎஸ்பியாக வல்லவன், ராமநாதபுரம் சரக காவலர் பயிற்சி மைய டிஎஸ்பியாக சுபாஷ், தஞ்சை சரக காவலர் பயிற்சி மைய டிஎஸ்பியாக கோபாலச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளனர்.