இந்த கருவியின் மூலம் ஒருவருக்கு தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தால் அது உறுதியாக பாசிட்டிவ் என்றே கருதப்படும் மீண்டும் பரிசோதனை தேவையில்லை என்றும் தொற்று உறுதி செ்யயப்பட்டவர்கள் ஐசிஎம்ஆர் மற்றும் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் நெறிமுறையின்படி வீட்டு தனிமை மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என ஐசிஎம்ஆர் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் தொற்று அறிகுறிகள் இருந்து இந்த கருவி மூலம் சோதனை செய்து அதில் நெகட்டிவ் என வந்தால் தற்போது வழக்கமாக செய்யப்படும் ஆர்டிபிசிஆர் சோதனையை மேற்கொள்ள வேண்டும். இந்த பரிசோதனையை மேற்கொள்வதற்கு வசதியாக மொபைல் ஆப் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் கூறியுள்ளது.