கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

யாஸ் புயல் எதிரொலி: ஒடிசாவில் தடுப்பூசி, கரோனா பரிசோதனை நிறுத்தம்

யாஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசாவில் தடுப்பூசி போடும் பணி, கரோனா பரிசோதனைகள் ஆகியவற்றை மூன்று நாள்களுக்கு மாநில சுகாதாரத்துறை நிறுத்தியுள்ளது.

News image
Updated On :24 மே 2021, 1:48 pm

DIN

யாஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசாவில் தடுப்பூசி போடும் பணி, கரோனா பரிசோதனைகள் ஆகியவற்றை மூன்று நாள்களுக்கு மாநில சுகாதாரத்துறை நிறுத்தியுள்ளது.

மத்திய கிழக்கு வங்க கடலில் இன்று காலை வலுப்பெற்றுள்ள யாஸ் என்று பெயரிடப்பட்ட இந்த புயல் அதி தீவிர புயலாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் ஒடிசா-மேற்குவங்க கடற்கரையை நோக்கி நகர்ந்து, வரும் 26ஆம் தேதி பிற்பகல் பாரதீப்-சாகர் தீவுக்கு இடையே கடக்கக்கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் ஒடிசா அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

நாளை முதல் மே 27ஆம் தேதி வரை பாலசூர், பத்ராக், கேந்திரபாரா, ஜகத்சிங்க்பூர், மயூர்பஞ்ச் மற்றும் கியோஞ்சர் மாவட்டங்களில் ஆகிய மாவட்டங்களில் கரோனா பரிசோதனை, தடுப்பூசி, வீடு வீடாக சென்று காய்ச்சல் கணக்கெடுப்பு போன்ற பணிகள் நடைபெறாது.

கேந்திரபாரா, ஜகத்சிங்க்பூர் மற்றும் கியோன்ஜார் மாவட்டங்களில் புயல் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் இந்த நடவடிக்கைகள் நிறுத்தப்படுவது குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முடிவு செய்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.