எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனத்தில் முதல்வர் ஆய்வு

செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

News image
முதல்வர் மு.க.ஸ்டாலின்.
Updated On :25 மே 2021, 12:16 pm

DIN

செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

கடந்த 2012ஆம் ஆண்டு ரூ.750 கோடி மத்திப்பில் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி உற்பத்தி நிறுவனம் கட்டப்பட்டது.

ஆனால், கட்டப்பட்டு 9 ஆண்டுகளாக செயல்படாத அந்த நிறுவனத்தின் தற்போதைய நிலை குறித்து முதல்வர் ஆய்வு செய்து வருகிறார்.

முன்னதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனை சந்தித்து திமுக நாடாளுமன்ற தலைவர் டி.ஆர்.பாலு, ஆலையை திறந்து தடுப்பூசி உற்பத்தி தொடங்குமாறு கடிதம் வழங்கினார்.

அந்த கடிதத்தை பெற்றுக்கொண்டு, இந்த ஆலையை புனரமைக்கும் பணிகளை துரிதமாக மேற்கொள்ள தான் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், விரைவில் இது குறித்து மத்திய அரசு உரிய முடிவை வெளியிடும் எனவும் மத்திய அமைச்சா் ஹா்ஷ் வா்தன் உறுதியளித்தாா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.