கேரளத்தில் இறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை: அமைச்சர் வீணா ஜார்ஜ்
கேரள மாநிலத்தில் இறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.


கேரள மாநிலத்தில் இறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
கரோனா இரண்டாம் அலையால், கேரளத்தில் பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது.
கரோனா பரவல் குறித்து அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியது,
கேரளத்தில் கரோனா பரிசோதனை அதிகரித்த போதிலும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. சில நாள்களுக்கு முன் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்ததால், தற்போது உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. ஆனால் இறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை.
கேரளத்தில் கருப்பு பூஞ்சை நோயால் இதுவரை 46 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனைவருக்கும் தடுப்பூசி போடுவதையே இலக்காக கொண்டுள்ளோம். இருப்பினும், தடுப்பூசியில் தட்டுப்பாடு இருப்பதால் எங்களுக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...