மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கேரளத்தில் இறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை: அமைச்சர் வீணா ஜார்ஜ்

கேரள மாநிலத்தில் இறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

News image
சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்
Updated On :25 மே 2021, 1:34 pm

DIN

கேரள மாநிலத்தில் இறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

கரோனா இரண்டாம் அலையால், கேரளத்தில் பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது.

கரோனா பரவல் குறித்து அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியது,

கேரளத்தில் கரோனா பரிசோதனை அதிகரித்த போதிலும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. சில நாள்களுக்கு முன் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்ததால், தற்போது உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. ஆனால் இறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை.

கேரளத்தில் கருப்பு பூஞ்சை நோயால் இதுவரை 46 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனைவருக்கும் தடுப்பூசி போடுவதையே இலக்காக கொண்டுள்ளோம். இருப்பினும், தடுப்பூசியில் தட்டுப்பாடு இருப்பதால் எங்களுக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.