2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

போச்சம்பள்ளி அருகே நீரில் மூழ்கி தந்தை, மகன் சாவு

போச்சம்பள்ளியை அடுத்த வேலம்பட்டி கிராமத்தில் மகனுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்கும் பொழுது, நீரில் மூழ்கி தந்தை, மகன் இருவரும் பலியான சம்பவம் ஊர் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :26 மே 2021, 1:15 pm

DIN

போச்சம்பள்ளியை அடுத்த வேலம்பட்டி கிராமத்தில் மகனுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்கும் பொழுது, நீரில் மூழ்கி தந்தை, மகன் இருவரும் பலியான சம்பவம் ஊர் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த வேலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி (42). இவர் தனது மகன் கிருபா (12)-க்கு அங்குள்ள விவசாய கிணற்றில் நீச்சல் கற்றுக்  கொடுத்துக்  கொண்டிருந்தார்.அப்போது எதிர்பாராமல் இருவரும் நீரில் மூழ்கினர்.

தகவலறிந்த போச்சம்பள்ளி தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் நிகழ்வு இடத்திற்கு விரைந்து சென்று  35 அடி தண்ணீர்  உள்ள விவசாய கிணற்றில் இருந்து  பெரியசாமி, கிருபா ஆகிய இருவரையும்  சடலமாக மீட்டனர் சடலங்களை கைப்பற்றி போலீசார், பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து நாகரசம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.