வீடுகளில் பாதுகாப்பு இல்லாதவர்களே ஹிஜாப் அணிய வேண்டும் என பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாகூர் பேசிய கருத்து சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதித்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பிரச்னையை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன.
இதையும் படிக்க | கிணற்றில் தவறி விழுந்த 13 பெண்கள் பலி: திருமண வீட்டில் ஏற்பட்ட சோகம்
இந்நிலையில், மத்தியப் பிரதேசம் மாநிலம் போபாலில் நடைபெற்ற கூட்டத்தில் பிரக்யா சிங் புதன்கிழமை பேசுகையில்,
எங்கும் ஹிஜாப் அணியத் தேவையில்லை. வீடுகளில் பாதுகாப்பற்றவர்களே ஹிஜாப் அணிய வேண்டும். வெளியில் இருக்கும்போது, 'இந்து சமாஜ்' எங்கிருந்தாலும், குறிப்பாக அவர்கள் படிக்கும் இடங்களில் ஹிஜாப் அணியத் தேவையில்லை எனத் தெரிவித்தார்.