அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

அங்கன்வாடி பணியாளர்களுக்கு உதவித்தொகையை உயர்த்தியது தில்லி அரசு

கடந்த பல நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களின் மாதாந்திர ஊதியம்

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 12:50 pm

DIN

புது தில்லி: கடந்த பல நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களின் மாதாந்திர கௌரவ ஊதியம் மற்றும் உதவித்தொகையை  தில்லி அரசு உயர்த்த இன்று முடிவு செய்துள்ளது.

அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட மாதாந்திர கௌரவ ஊதியம் மற்றும் உதவித்தொகை மார்ச் மாதம் முதல் வழங்கப்படும் என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ராஜேந்திர பால்  கௌதம் தெரிவித்தார்.

இதுவரை அங்கன்வாடி பணியாளர்களுக்கு செல்லிடைப்பேசிகளை பராமரிக்க  ஊதியமாக 9,678 ரூபாயும், தகவல் தொடர்பு உதவித்தொகையாக, 200 ரூபாயும் வழங்கப்பட்டு வந்தது.

தற்போது தில்லி அரசு  அங்கன்வாடி பணியாளர்களின் மாதாந்திர கௌரவ ஊதியத்தை ரூ.11,220 ஆக உயர்த்தியுள்ளது. மேலும் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பிற்கு  ரூ.1,500 ஆக உயர்த்தியுள்ளது.

உதவியாளர்களின் மாதாந்திர கௌரவ ஊதியம் ரூ.4,839ல் இருந்து ரூ.5,610 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அவர்களின் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பிற்கு 1,200 ரூபாய் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள்  பணியில் சேர வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சத்துணவு விநியோகத்தை தொடங்க வேண்டும் என்று அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.