அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தருமபுரி நகர்மன்ற மறைமுகத் தேர்தல்: திமுகவின் லட்சுமி மாது வெற்றி

தருமபுரி நகர்மன்றத் தலைவரை தேர்தெடுக்க நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் திமுகவின் லட்சுமி மாது வெற்றி பெற்றார்.

News image
Updated On :4 மார்ச் 2022, 7:55 am

DIN

தருமபுரி: தருமபுரி நகர்மன்றத் தலைவரை தேர்தெடுக்க நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் திமுகவின் லட்சுமி மாது வெற்றி பெற்றார்.

தருமபுரி நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இந்த வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் கடந்த மாதம் 19 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவுகள் கடந்த‌ 22-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் திமுக 18 வார்டுகளில் வெற்றி பெற்றது. அதன் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஒருவரும், சுயேச்சை ஒருவரும் வெற்றி பெற்றனர். ஏனைய 13 வார்டுகளில் அதிமுகவினர் வெற்றிபெற்றனர்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை தருமபுரி நகர்மன்றத் தலைவரை தேர்தெடுக்கும் மறைமுகத் தேர்தல் நகராட்சி அலுவலகத்தில் ஆணையர் சித்ரா சுகுமார் முன்னிலை நடைபெற்றது.

இத்தேர்தலில் திமுக சார்பில் அக்கட்சி தலைமை அறிவித்த லட்சுமி மாது வேட்புமனு தாக்கல் செய்தார். இதேபோல அதிமுக சார்பில் ராஜாத்தி ரவி என்பவர் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து காலை 10 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் திமுகவின் லட்சுமி மாது 20 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 

இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக ராஜாத்தி ரவி 13 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.  வெற்றி பெற்ற நகர்மன்றத் தலைவர் லட்சுமி மாதுவுக்கு, நகராட்சி ஆணையர், அலுவலர்கள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.