அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

அரூர் பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர்: திமுக தம்பதியர் வெற்றி

அரூர் பேரூராட்சியின் தலைவர், துணைத் தலைவர் பதவிக்கு திமுகவைச் சேர்ந்த தம்பதியர் வெற்றி பெற்றுள்ளனர்.

News image
அரூர் பேரூராட்சியின் தலைவர் இந்திராணி, துணைத் தலைவர் சூர்யா து. தனபால் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவிக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர்.கலைராணி உள்ளிட்ட பேரூராட்சி பணியாளர்கள்.
Updated On :4 மார்ச் 2022, 12:23 pm

DIN

அரூர்: அரூர் பேரூராட்சியின் தலைவர், துணைத் தலைவர் பதவிக்கு திமுகவைச் சேர்ந்த தம்பதியர் வெற்றி பெற்றுள்ளனர்.

தருமபுரி மாவட்டம், அரூர் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இந்த பேரூராட்சியின் தலைவர் பதவி பெண்கள் பொதுப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அரூர் பேரூராட்சி வார்டு உறுப்பினர்களில் திமுக 7, அதிமுக 7, பாமக 2, சுயேச்சைகள் 2 பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.

இதையெடுத்து, வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் திமுக வேட்பாளர் இந்திராணி 12 வாக்குகளை பெற்று வெற்றிப் பெற்றார். இவருக்கு எதிராக போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் த.நிவேதா 6 வாக்குகளை பெற்று தோல்வியுற்றார். இதேபோல், அரூர் பேரூராட்சியின் துணைத் தலைவராக திமுக வேட்பாளர் சூர்யா து.தனபால் வெற்றி பெற்றார். அரூர் பேரூராட்சியின் தலைவர், துணைத் தலைவர் பதவியில் வெற்றிப் பெற்றுள்ள சூர்யா து.தனபால், இந்திராணி ஆகியோர் தம்பதியர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, அரூர் பேரூராட்சியின் தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் அரூர் கச்சேரிமேடு சாலை சந்திப்பில் உள்ள பேரறிஞர் அண்ணா, அம்பேத்கர் ஆகியோரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இதில், முன்னாள் எம்எல்ஏ ஆர்.வேடம்மாள், திமுக ஆதிதிராவிடர் நலக்குழு மாநில துணைச் செயலர் எஸ்.ராஜேந்திரன், வார்டு உறுப்பினர் முல்லைரவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.