அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

அவிநாசி தலைவர் தேர்தல்: 3 வேட்பாளர்களும் தலா 6 வாக்குகள் பெற்றதால் பரபரப்பு

அவிநாசி பேரூராட்சி தலைவர் தேர்தலில் போட்டியிட்ட 3 வேட்பாளர்களும் தலா 6 வாக்குகள் பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :4 மார்ச் 2022, 8:05 am

DIN

அவிநாசி: அவிநாசி பேரூராட்சி தலைவர் தேர்தலில் போட்டியிட்ட 3 வேட்பாளர்களும் தலா 6 வாக்குகள் பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அவிநாசி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதையடுத்து நடைபெற்ற தலைவர் தேர்தலில் 6வது வார்டு திமுக உறுப்பினர் தனலட்சுமி, 7வது வார்டு திமுக உறுப்பினர் சசிகலா, 14 வது வார்டு அதிமுக உறுப்பினர் சித்ரா ஆகிய 3 பேர் போட்டியிட்டனர். இதில் ஒவ்வொருவரும் தலா 6 வாக்குகள் பெற்றனர். இதையடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனந்தன், அடுத்த கட்டமாக குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பதாக அறிவித்துள்ளார். இதனால் அவிநாசி பேரூராட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வார்டு உறுப்பினர்கள் இதுகுறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

அவிநாசி அருகே திருமுருகன்பூண்டி நகராட்சியில் நடைபெற்ற தலைவர் தேர்தலில் திமுக கவுன்சிலர் குமார் 15 வாக்குகள் பெற்று தலைவராக வெற்றி பெற்றார் . கவுன்சிலர்(இந்திய கம்யூனிஸ்ட்)  சுப்பிரமணி 12 வாக்குகள் பெற்றார்.

அவிநாசி அருகே குன்னத்தூர் பேருராட்சியில் நடைபெற்ற தலைவர் தேர்வில் 12-வது வார்டு சுயேச்சை உறுப்பினர் குமாரசாமி 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் 13-வது வார்டு உறுப்பினர் வெங்கடாசலம் 7 வாக்குகள் பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.