சீர்காழி: வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியில் நடைபெற்ற பேரூராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த 9-வது வார்டு உறுப்பினர் கார்த்திகேயன் மற்றும் திமுகவை சேர்ந்த 6-வது வார்டு உறுப்பினர் பூங்கொடி ஆகியோர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர்.
பின்னர் நடைபெற்ற மறைமுக தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த கார்த்திகேயன் 4 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். திமுகவைச் சேர்ந்த பூங்கொடி அலெக்சாண்டர் 11 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இதனையடுத்து திமுகவைச் சேர்ந்த பூங்கொடி அலெக்சாண்டர் பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு பேரூராட்சி செயல் அலுவலர் மருதுபாண்டியன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். வெற்றி பெற்ற பூங்கொடிக்கு திமுகவினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.