தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு: அமைச்சர் அருண்ராஜ்கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நீட் மறுதேர்வு: தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!
/

வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியில் திமுகவின் பூங்கொடி அலெக்சாண்டர் வெற்றி

வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியில் நடைபெற்ற பேரூராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த 9-வது வார்டு உறுப்பினர்

News image
Updated On :4 மார்ச் 2022, 1:25 pm IST

சீர்காழி: வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியில் நடைபெற்ற பேரூராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த 9-வது வார்டு உறுப்பினர் கார்த்திகேயன் மற்றும் திமுகவை சேர்ந்த 6-வது வார்டு உறுப்பினர் பூங்கொடி ஆகியோர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். 

பின்னர் நடைபெற்ற மறைமுக தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த கார்த்திகேயன் 4 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். திமுகவைச் சேர்ந்த பூங்கொடி அலெக்சாண்டர் 11 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 

இதனையடுத்து திமுகவைச் சேர்ந்த பூங்கொடி அலெக்சாண்டர் பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு பேரூராட்சி செயல் அலுவலர் மருதுபாண்டியன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். வெற்றி பெற்ற பூங்கொடிக்கு திமுகவினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.