அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கும்மிடிப்பூண்டி பேரூராட்சி தலைவர் தேர்தலில் திமுகவை சேர்ந்த சகிலா அறிவழகன் வெற்றி

கும்மிடிப்பூண்டி பேரூராட்சி தலைவர் தேர்தலில் திமுகவை சேர்ந்த சகிலா அறிவழகன்  வெற்றி பெற்றுள்ளார்.

News image
Updated On :4 மார்ச் 2022, 8:15 am

DIN

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பேரூராட்சி தலைவர் தேர்தலில் திமுகவை சேர்ந்த சகிலா அறிவழகன்  வெற்றி பெற்றுள்ளார்.

கும்மிடிப்பூண்டி பேரூராட்சி தேர்தலில் 9 திமுக கவுன்சிலர்கள், 3 அதிமுக கவுன்சிலர்கள், 1 விசிக, 1 பாமக, 1 சுயேச்சை கவுன்சிலர் வெற்றி பெற்றனர்.

இந்நிலையில் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் திமுகவை சேர்ந்த அதிகாரப்பூர்வ வேட்பாளராக  சசிலா அறிவழகனும், அவரை எதிர்த்து திமுக சார்பில் துர்கேஷ்வரி பாஸ்கர் போட்டியிட மனுதாக்கல் செய்தனர்.

இதைத் தொடர்ந்து பேரூராட்சி தலைவர் தேர்தல் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் ப.யமுனா தலைமையிலும், இளநிலை உதவியாளர் பிரபாகரன், தூய்மை பணி மேற்பார்வையாளர் குமார், பதிவரை எழுத்தர் ரவி, வரி தண்டலர் குணசேகரன் முன்னிலையில் நடைபெற்றது.

Story image

மறைமுகமாக நடைபெற்ற இந்த தேர்தலில்  15 கவுன்சிலர்களும் ஒருவர் பின் ஒருவராக வாக்கு பெட்டியில் வாக்களித்தனர். தொடர்ந்து நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் போது திமுக அதிகாரப்பூர்வ வேட்பாளர் சகிலா அறிவழகனுக்கு 9 வாக்குகளும், திமுக வேட்பாளர் துர்கேஷ்வரி பாஸ்கருக்கு 6 வாக்குகளும் கிடைத்த நிலையில் திமுக அதிகாரப்பூர்வ வேட்பாளர் சகிலா அறிவழகன் வெற்றி பெற்றார்.

கும்மிடிப்பூண்டி பேரூராட்சி தலைவராக திமுக நகரச் செயலாளர் அறிவழகனின் மனைவி சகிலா அறிவழகன் வெற்றி பெற்ற நிலையில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் நிகழ்விடம் வந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து அவரை பேரூராட்சி இருக்கையில் அமர வைத்தார்.

இதைத் தொடர்ந்து கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் மணிபாலன், திமுக பொறுப்புக்குழு உறுப்பினர்கள் வெங்கடாசலபதி, எம்.எல்.ரவி,  மாவட்ட மீனவரணி அமைப்பாளர் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து கும்மிடிப்பூண்டி பேரூராட்சி தலைவர் சகிலா அறிவழகன், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன்  தலைமையில் திமுகவினரோடு சேர்ந்து கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.