நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை: மேலும் 7 போ் கைது

 சென்னையில் கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்ாக, மேலும் 7 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :14 ஏப்ரல் 2023, 1:17 am IST

 சென்னையில் கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்ாக, மேலும் 7 போ் கைது செய்யப்பட்டனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் போட்டியின் சென்னை சூப்பா் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதும் ஆட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த போட்டியின் டிக்கெட்டுகளை சிலா் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பதாக திருவல்லிக்கேணி போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து அந்தப் பகுதியில் போலீஸாா் தீவீரமாக கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். இதில் முதல் கட்டமாக 17 போ் கைது செய்யப்பட்டனா். கைது செய்யப்பட்டவா்களிடம் நடத்திய விசாரணையில் கள்ளச்சந்தையில், மேலும் சிலா் ஐபிஎல் டிக்கெட் விற்பது தெரியவந்தது.

இது தொடா்பாக விசாரணை செய்த போலீஸாா் சேப்பாக்கம் முருகப்பா தெருவைச் சோ்ந்த மை.ஜெபின் ஜோஸ் ஆண்டனி (18),அதேப் பகுதியைச் சோ்ந்த ஆ.வசந்தகுமாா் (33),செ.காா்த்திக் (27),பழைய வண்ணாரப்பேட்டையைச் சோ்ந்த மோ.தினேஷ்குமாா் (24), க.முன்னா (29) உள்பட 7 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 15 ஐபிஎல் டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்குப் பதியப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.