கும்மிடிப்பூண்டியில் பல்வேறு இடங்களில் அதிமுக சாா்பில் தண்ணீா் பந்தல் திறக்கப்பட்டது.
புதுவாயல், கவரப்பேட்டை, கும்மிடிப்பூண்டி பஜாா், புது கும்மிடிப்பூண்டி, எளாவூா், ஆரம்பாக்கம், மாதா்பாக்கம் ஆகிய பகுதிகளில் அதிமுக சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா திருவள்ளூா் வடக்கு மாவட்ட அதிமுக செயலா் சிறுனியம் பி.பலராமன் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாா், கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவா் கே.எம்.எஸ்.சிவக்குமாா், ஒன்றிய அதிமுக செயலா் கோபால் நாயுடு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.