புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு சிபிஐ சம்மன்

மதுக்கொள்கை தொடர்பான வழக்கில் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. 

News image
Updated On :14 ஏப்ரல் 2023, 3:15 pm

DIN

மதுக்கொள்கை தொடர்பான வழக்கில் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. 

தில்லி அரசின் கலால் கொள்கையில் ஊழல் நடந்ததாகக் கருதி சிபிஐ விசாரணைக்கு தில்லி துணை நிலை ஆளுநா் விகே சக்சேனா கடந்த ஆண்டு பரிந்துரை செய்தாா். இதைத் தொடா்ந்து, சிசோடியா உள்ளிட்ட பலா் மீது சிபிஐயும் அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்திருந்தது. 

மேலும் இந்த விவகாரத்தில் சிபிஐ கடந்த ஆண்டு நவம்பா் 25 -ஆம் தேதி தனது முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இதைத்தொடர்ந்து தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ அண்மையில் கைது செய்து சிறையில் அடைத்தது. 

இந்த நிலையில் இவ்வழக்கில் ஏப்ரல் 16ம் தேதி நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. இதனிடையே சிபிஐயின் இந்த சம்மனால் கேஜ்ரிவாலின் போராட்டம் ஒருபோதும் நின்று விடாது என அக்கட்சியின் எம்பி சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.