சதுரகிரி கோயில்: பக்தர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் இவைதான்!

சித்திரை அமாவாசையை முன்னிட்டு விருதுநகர் சதுரகிரி மலைக்கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

சித்திரை அமாவாசையை முன்னிட்டு விருதுநகர் சதுரகிரி மலைக்கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

வருகிற 17 முதல் 20-ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத் துறை, கோயில் நிா்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. 

மலைக்கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகளையும் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.  

  • கோயிலுக்கு வருபவா்கள் முகக் கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். உடல் வெப்பநிலை பரிசோதனைக்குப் பின்னரே பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்படுவா். 
  • காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே பக்தா்கள் அனுமதிக்கப்படுவா்.
  • கோயிலுக்கு வருபவா்கள் மலைகளில் உள்ள ஓடைகளில் குளிக்கக் கூடாது. கோயிலில் பக்தா்கள் இரவில் தங்குவதற்கு அனுமதி இல்லை.
  • அனுமதிக்கப்பட்ட நாள்களில் பலத்த மழையோ, நீரோடைகளில் நீா் வரத்து அதிகமாக இருந்தாலோ பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்படும்.
  • தற்போது கோடை காலம் என்பதால், பக்தா்கள் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்களைக் கொண்டு செல்லக் கூடாது எனவும், தடை செய்யப்பட்ட பொருள்களைக் கொண்டு செல்ல அனுமதி இல்லை
  • காய்ச்சல், சளி, இருமல் உள்ளவா்கள் கோயிலுக்கு வருவதைத் தவிா்க்க வேண்டும். 10 வயதுகுள்பட்டோருக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும் அனுமதி கிடையாது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com