பிகார் மாநிலம் சமஸ்திபூரில் தன் வீட்டுக்கு வெளியே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த விவசாயி அதிகாலை உயிரிழந்த நிலையில் குடும்பத்தாரால் பார்க்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ஹரீஸ்சந்திர ராய் (50) என்கிற விவசாயி அந்த கிராமத்திலேயே அதிக நிலங்கள் கொண்டுள்ளவர்.
இரவு தூங்க போகும்போது அவரை இறுதியாக பார்த்ததாக அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.
அதிகாலை குடும்பத்தார் பார்க்கும்போது இரத்த வெள்ளத்தில் அந்த விவசாயி காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயி தலையில் இரண்டு குண்டுகள் பாய்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.