ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

ஐசிஐசிஐ வங்கி முன்னாள் தலைவர் நாராயணன் வாகுல் காலமானார்

தனியார் வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ வங்கி தொடங்கப்படுவதற்கு முக்கியப் பங்காற்றிய நாராயணன் வாகுல் இன்று(மே 18), சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார்.

News image
Updated On :18 மே 2024, 6:26 pm IST

தனியார் வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ வங்கி தொடங்கப்படுவதற்கு முக்கியப் பங்காற்றிய நாராயணன் வாகுல் இன்று(மே 18), சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார்.

தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில், 1938-இல் ஒரு சிறுகிராமத்தில் பிறந்த வாகுல், பள்ளிப்படிப்பினை சென்னையில் ராமகிருஷ்ணா பள்ளியிலும், கல்லூரிப் படிப்பினை சென்னை லயோலா கல்லூரியிலும் படித்தார்.

1950-களில் பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றினார். தனது 44ஆவது வயதில் இந்திய வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டார். 1980-களில் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, ஐசிஐசிஐ வங்கியானது தொடங்கப்பட்டபோது, அந்த வங்கியின் தலைமைப் பொறுப்பினை வகிக்கும் வாய்ப்பினை வாகுல் அடைந்தார். 1996-ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்ற வாகுல், 2009-ஆம் ஆண்டு வரை ஐசிஐசிஐ வங்கியின் செயல்சாரா இயக்குநராக இருந்தார்.

வங்கித்துறையில் இவரது சேவையைப் பாராட்டும் விதமாக 2010ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாள்களாக உடல்நலமற்று இருந்தார் வாகுல். உடல்நலம் மிகவும் குன்றிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மருத்துவ சிகிச்சை பலனின்றி தனது 88-ஆவது வயதில் மறைந்து விட்டார் என்று தெரிகிறது. வாகுல் அவர்களின் மறைவினையொட்டி, பலரும் வருத்தங்களும் இரங்கலும் தெரிவித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.