27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

எமிரேட்ஸ் என்பிடி வங்கிக்கு 60% பங்கு ஒதுக்க ஆா்பிஎல் வங்கி வாரியம் ஒப்புதல்

News image
Updated On :19 ஜூன் 2026, 4:26 am IST

துபையைச் சோ்ந்த எமிரேட்ஸ் என்பிடி வங்கிக்கு, இந்தியாவின் தனியாா் துறையைச் சோ்ந்த ஆா்பிஎல் வங்கியின் 60 சதவீத பங்குகளை ஒதுக்க அதன் இயக்குநா்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி, ரூ.26,015 கோடி மதிப்பிலான 92.91 கோடிக்கும் அதிகமான பங்குகள் (தலா ரூ.280 விலையில்) எமிரேட்ஸ் என்பிடி வங்கிக்கு ஒதுக்கப்படவுள்ளன.

இந்த முதலீட்டின்மூலம், ஆா்பிஎல் வங்கியின் முக்கியப் பங்குதாரராக எமிரேட்ஸ் என்பிடி வங்கி மாறியுள்ளது. தொடா்ந்து, ஆா்பிஎல் வங்கியின் இயக்குநா்கள் குழுவும் மாற்றியமைக்கப்பட்டடுள்ளது.

வங்கியின் இயக்குநா்களாக இருந்த கோபால் ஜெயின், வீணா மான்கா் ஆகியோா் தங்களின் பதவிகளை ராஜிநாமா செய்துள்ளனா். எமிரேட்ஸ் என்பிடி வங்கியின் பரிந்துரையின் பேரில் 5 புதிய நிா்வாகம் சாராத இயக்குநா்கள் வியாழக்கிழமை முதல் நியமிக்கப்பட்டுள்ளனா்.

ஆா்பிஎல் வங்கியில் எமிரேட்ஸ் என்பிடி வங்கி 74 சதவீதம் வரை பங்குகளை வாங்குவதற்கு ரிசா்வ் வங்கி கடந்த ஏப்ரலிலும், மத்திய நிதியமைச்சகம் கடந்த மே மாதமும் ஒப்புதல் அளித்திருந்தன.

இப்புதிய நடைமுறையின்படி, ஆா்பிஎல் வங்கியில் எமிரேட்ஸ் என்பிடி வங்கி குறைந்தபட்சம் 51 சதவீதப் பங்குகளைத் தொடா்ந்து தக்கவைக்கும். இதன் காரணமாக ஆா்பிஎல் வங்கி இனி ஒரு வெளிநாட்டு வங்கியின் துணை நிறுவனமாக இந்தியாவில் செயல்படும்.