இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

கல்லூரி விடுதியில் 15 வயது மாணவனைக் கொன்ற 3 சிறுவர்கள் கைது!

ஒடிசாவில் 15 வயது மாணவனைக் கொன்ற 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...

News image

கோப்புப் படம்

Updated On :23 ஏப்ரல் 2025, 2:21 pm

ஒடிசாவில் 15 வயது மாணவனைக் கொன்ற 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கியோஞார் மாவட்டத்தின் தங்கரபதா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜலந்தரா மாஹாந்தா (வயது 15). இவர் பத்தாம் வகுப்புப் பொது தேர்வில் தேர்ச்சிப் பெற்று கடந்த 15 நாள்களாக தனியார் கல்லூரி நடத்தி வந்த கோடைக்கால வகுப்பில் பயிற்சி பெற்று வந்தார்.

இந்நிலையில், கடந்த ஏப்.22 ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் அந்தக் கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்த ஜலந்தராவின் அறைக்கு அருகிலுள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்க வந்த மற்றொரு மாணவர் ஜலந்தரா மயங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர், உடனடியாக கல்லூரி அதிகாரிகளுக்கு அந்த மாணவர் தகவல் அளித்ததைத் தொடர்ந்து அவரை மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஜலந்தரா ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் உயிரிழந்த ஜலந்தராவுக்கும் அந்த கோடைக்கால வகுப்பின் மாணவர் தலைவரான மற்றொரு சிறுவனுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நிலவியது கண்டறியப்பட்டது.

கடந்த ஏப்.21 ஆம் தேதி இரவு அந்த மாணவர் தலைவரும் ஜலந்தராவுடன் பகையை வளர்த்து வந்த மற்ற 2 மாணவர்களுடன் இணைந்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, மோதல் தீவிரமடைந்ததால் ஜலந்தராவை போர்வையால் மூடி அவரது முகத்தில் துணியை வைத்து மூச்சடைத்து கொலை செய்துள்ளனர்.

இதனால், கைது செய்யப்பட்ட 3 சிறுவர்களும் குழந்தைகள் நல ஆணையத்தின் முன்பு ஆஜர் படுத்தப்பட்டு இன்று ஜார்சுகுடா மாவட்டத்திலுள்ள கூர்நோக்கு மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.