தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

முன்னாள் நீதிபதி கர்ணனின் ‘ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி’ கொடி அறிமுகம்!

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் லஞ்சம் வாங்கியதற்கான ஆதாரங்கள் இருக்கிறது. அதனால் அவர்கள் மீது புகார் அளித்தேன். விசாரணைக்குச் சென்ற என் மீது... நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் போட்டு சிறையில் அடைத்தார்கள்.

News image
Updated On :8 ஜூன் 2018, 3:59 pm IST

முன்னால் நீதிபதி கர்ணன் தனது கட்சிக் கொடியை இன்று அறிமுகம் செய்தார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி கர்ணன் ‘ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சியை’ தொடங்குவதாக கடந்த மாதம் கொல்கத்தாவில் அறிவித்தார். இந்நிலையில் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நடைபெற்ற விழாவில் தனது கட்சியின் கொடியை இன்று அவர் அறிமுகம் செய்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் தலை விரித்தாடும் ஊழலை ஒழிப்பதற்காகவே தான் கட்சி தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

‘சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் லஞ்சம் வாங்கியதற்கான ஆதாரங்கள் இருக்கிறது. அதனால் அவர்கள் மீது புகார் அளித்தேன். விசாரணைக்குச் சென்ற என் மீது... நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் போட்டு சிறையில் அடைத்தார்கள். ஆனாலும், மீண்டும் எனது புகாரை விசாரணைக்குக் கொண்டு வரவேண்டும். அதைப் பற்றிய விவாதங்களை பாராளுமன்றத்தில் எழுப்ப வேண்டும் என்பதற்காகவே நான் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளேன். பாராளுமன்றத்தில் எனது புகாரைப் பற்றிய விவாதத்தை எழுப்ப வேண்டுமானால் எம் பி க்களைத் தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும். அதற்காகவும் தான் நான் இந்த அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளேன். என்னுடைய கட்சி காட்டாற்று வெள்ளம் போல வேகம் கொண்டது. எந்த அரசியல் கட்சி எங்களை எதிர்த்து நின்றாலும் நாங்கள் நிச்சயம் வெற்றி பெற்று பாரளுமன்றத்துக்குள் நுழைவோம். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் ஆறுதல் தொகை அளிப்பதாக நான் அறிவித்திருந்தேன். அவர்களுக்கு 1, 30,000 ரூபாய் நான் தர வேண்டும். அதை நானே சென்று அவர்களிடம் அளிப்பேன். என முன்னாள் நீதிபதி கர்ணன் தெரிவித்தார்.

Related Article

பேருந்துகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவது வெட்டி வேலை: மேனகா காந்தி!

லஞ்சம் கேட்கும் அரசு அதிகாரிகளை செருப்பால் அடியுங்கள்! சொன்னவர்களும், செய்து காட்டியவர்களும்!

மைனர் சிறுவன் கார் ஓட்ட ஆசைப்பட்டதில் நேர்ந்த விபரீதம்!

ரீல் வேங்கை மவனைப் பார்த்து யாரென்று கேட்ட ரியல் வேங்கை மகன்!

ரஜினியும் மேதகு ஆளும்தரப்பும் கூறும் அந்த சமூக விரோதிகள் யார்? வாழ்வாதாரத்துக்காகப் போராடுவது சமூக விரோதமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.