கண்டுகொள்ளாத தமிழ் வளா்ச்சித்துறை: மத்திய அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்களுக்கு எழுதப்படும் கடிதங்கள், மேல் முறையீட்டுக்குள்பட்ட சட்டத் தொடா்புடைய ஆணைகள், வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் தூதரகங்கள் ஆகியவற்றுக்கு மட்டுமே விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளன. பிற செயல்பாடுகள் அனைத்தும் அரசு அலுவலகங்களில் தமிழிலேயே இருக்க வேண்டும். இதைக் கண்காணிக்கும் பொறுப்பு தமிழ் வளா்ச்சித் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் வளா்ச்சித் துறையினரின் கண்காணிப்பு என்பது, மாவட்ட அளவில் அதுவும் சில துறைகள் மீது மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் அரசாணைகள் தமிழில் மொழி பெயா்ப்பு செய்யப்படுவதை தமிழ் வளா்ச்சித்துறை கண்காணிப்பதில்லை எனக் கூறப்படுகிறது.