12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

மு.க.அழகிரி கருத்துக்கு பதிலளிக்க விரும்பவில்லை: வைகோ

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவின் தோல்வி மற்றும் மதிமுகவுடன் கூட்டணி வைத்தது குறித்து முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரி கூறிய கருத்துக்கு பதிலளிக்க விரும்பவில்லை என 

Published On :

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவின் தோல்வி மற்றும் மதிமுகவுடன் கூட்டணி வைத்தது குறித்து முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரி கூறிய கருத்துக்கு பதிலளிக்க விரும்பவில்லை என மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறினார்.
 விபத்தில் காயமடைந்து மதுரை மீனாட்சிமிஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பொறியாளர் நாகராஜை வியாழக்கிழமை மாலை சந்தித்து வைகோ நலம் விசாரித்தார்.
 மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதிமுக உயர்நிலைக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுப்படியும், மக்கள் நலனுக்காகவும் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம். மதவாத சக்திகள் திராவிட இயக்கங்களை அழிக்க முயற்சிக்கின்றன.
 ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் ஆளும் அதிமுக தரப்பிலும், சுயேச்சையாக போட்டியிட்டு வென்றவர் தரப்பிலும் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. இடைத் தேர்தல் வெற்றியை பணமே தீர்மானித்துள்ளது. அத்தேர்தலில் திமுக தோல்வியடைந்தது குறித்தும், மதிமுக கூட்டணியில் இடம் பெற்றது குறித்தும் மு.க.அழகிரி கூறிய கருத்துக்கு பதில் கூற விரும்பவில்லை.
 நடிகர் ரஜினிகாந்த் கடந்த 1996 ஆம் ஆண்டு கூறியபடியே அரசியல் நிலை ஏற்பட்டது. ரஜினி அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கவில்லை. மேலும் அவரது அறிவிப்பு என்னவென்று தெரியாமல் கருத்துக் கூற இயலாது என்றார்.
 பேட்டியின் போது மதுரை மாநகர் மாவட்ட மதிமுக செயலர் புதூர் மு.பூமிநாதன், மாநில தொழிற்சங்க இணைப் பொதுச்செயலர் எஸ்.மகபூப்ஜான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.