இந்த ஆண்டு 11-வது இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 7-ஆம் தேதி தொடங்கி மே 27-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதல் நாளன்று மும்பை - சென்னை அணிகள் மோதவுள்ளன.
இந்த வருடம் ஐபிஎல் அமைப்பும் ஸ்டார் நிறுவனமும் இணைந்து ஐபிஎல் கீதம் என்றொரு பாடலை உருவாக்கியுள்ளன. அதன் காணொளி அண்மையில் வெளியிடப்பட்டது. இந்தி, தமிழ், பெங்காலி, கன்னடம், தெலுங்கு ஆகிய ஐந்து மொழிகளில் இந்தப் பாடல் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் ஐ.பி.எல். தொடக்க விழாவில் ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காக நடிகர் ரன்வீர் சிங் பங்கேற்கும் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 15 நிமிடம் அந்நிகழ்ச்சியில் நடனம் ஆடுவதற்காக ரன்வீர் சிங் 5 கோடி ரூபாய் கேட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு ஐ.பி.எல். நிர்வாகமும் ஒப்புக் கொண்டது என்கிறது அத்தகவல்.
ரன்வீருக்கு அதிகளவில் ரசிகர்கள் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.