கரோனா நோய்த் தொற்றுக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 9 பேர் இன்று, வியாழக்கிழமை வீடு திரும்பினர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 27 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் கடந்த 10 ஆம் தேதி 70 வயது மூதாட்டி உயிரிழந்தார்.
பாதிக்கப்பட்டவர்களில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 9 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பினர்.
அவர்களுக்கு பழங்கள் மற்றும் பொருள்கள் கொடுத்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வழியனுப்பிவைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதன் மூலம் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 5 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருநெல்வேலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 2 பேர் ஏற்கனவே வீடு திரும்பி உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அண்ணாமலைப் பல்கலை. ஊழியா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

சம்பா பருவத்துக்கு ஏற்ற தரமான விதைகளை விற்க வேண்டும்: தனியாா் விதை விற்பனையாளா்களுக்கு அறிவுறுத்தல்
ஆட்டோ கவிழ்ந்து பயணி உயிரிழப்பு

3 தமிழா்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து தவாகவினா் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்
“பாஜகவின் குழந்தை தவெக”: திமுக மருது அழகுராஜ் விமர்சனம்



