தடையை மீறி போராட்டம்: மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 1,600 பேர் மீது வழக்குப்பதிவு

அனுமதியின்றி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 1600 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
Updated on
1 min read

அனுமதியின்றி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 1600 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, 23 நாள்களாக தில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை வள்ளுவா் கோட்டம் அருகில் திமுக கூட்டக் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி தர மறுத்த நிலையில், தடையை மீறி வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் திமுக கூட்டணிக் கட்சித் தலைவா்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் தடையை மீறி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 1,600 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

போராட்டத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளா் வைகோ, காங்கிரஸ் தங்கபாலு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன், கூட்டணிக் கட்சித் தலைவா்கள், திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி, தயாநிதி மாறன் உள்பட கூட்டணிக் கட்சி மக்களவை மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்கள் போராட்டத்தில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com