முல்லை பெரியாறு அணையில் நாளை மறுநாள் துணைக்கண்காணிப்பு குழுவினர் ஆய்வு

கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், முல்லை பெரியாறு அணையில், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து வரும் வியாழக்கிழமை துணைக்கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்கின்றனர்.
முல்லை பெரியாறு அணை
முல்லை பெரியாறு அணை
Published on
Updated on
1 min read

கம்பம்: கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், முல்லை பெரியாறு அணையில், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து வரும் வியாழக்கிழமை துணைக்கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்கின்றனர்.

முல்லை பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க உச்ச நீதிமன்றம் நியமித்த மூவர் குழுவிற்கு உதவியாக துணைக்கண்காணிப்பு குழு என்ற ஐவர் குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவராக மத்திய நீர்வள ஆணைய செயற் பொறியாளர் சரவணக்குமார் உள்ளார். தமிழக பிரதிநிதிகளாக பெரியாறு அணை  சிறப்பு கோட்ட செயற் பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற் பொறியாளர் குமார், கேரள பிரதிநிதிகளாக கேரள நீர்ப்பாசனத் துறை செயற் பொறியாளர் பினுபேபி, உதவி பொறியாளர் பிரசீத் ஆகியோர் உள்ளனர்.

கடந்த ஜனவரி 22ல் அணையின் நீர்மட்டம், 119.40 அடியாக இருந்தபோது துணைக்குழுவினர் பெரியாறு அணையில் ஆய்வு செய்தனர். இந்த நிலையில், நான்கு மாதங்களுக்குப்பின் கேரளத்தில் பருவமழை தொடங்கி உள்ள நிலையில், அணையின் நீர்மட்டம் 112.40 அடியாக உள்ள நிலையில், அணையில் செய்துள்ள முன்னேற்பாடுகள் குறித்து துணைக்கண்காணிப்பு குழுவினர் வரும் வியாழக்கிழமை பெரியாறு அணையில் ஆய்வுகள் நடத்த உள்ளனர்.

மேலும் மெயின் அணை, பேபி அணை, கேலரிப்பகுதி, மதகுப்பகுதி மற்றும் அணையின் நீர்வரத்து, வெளியேற்றம், சீப்பேஜ் வாட்டர் (கசிவுநீர்) குறித்தும் குழுவினர் ஆய்வு செய்து, அதன்பிறகு குமுளி 1ஆம் மைலில் துணைக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com