ஈரோட்டில் ஜே. சுத்தானந்தன் நினைவு நாள்

ஈரோட்டில் தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் மறைந்த தலைவரான ஜெ. சுத்தானந்தன் நினைவு நாள் இன்று நினைவுகூரப்பட்டது.
ஜெ. சுத்தானந்தன் சிலைக்கு மாலை அணிவித்த செங்குந்த மகாஜன சங்கத்தினர்
ஜெ. சுத்தானந்தன் சிலைக்கு மாலை அணிவித்த செங்குந்த மகாஜன சங்கத்தினர்
Updated on
1 min read


ஈரோடு: ஈரோட்டில் தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் மறைந்த தலைவரான ஜெ. சுத்தானந்தன் நினைவு நாள் இன்று நினைவுகூரப்பட்டது.

தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்கத்தின் ஈரோடு மாவட்டக் கிளை சார்பில் ஜெ. சுத்தானந்தனின் பத்தாவது ஆண்டு நினைவு நாள் கடைப்பிடிக்கப்பட்டது.

விழாவையொட்டி ஈரோடு செங்குந்தர் பள்ளியில் உள்ள சுத்தானந்தன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்குத் தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்க மாவட்ட செயலாளர் ஆசைத்தம்பி தலைமை தாங்கினார். செங்குந்தர் கல்விக் கழகச் செயலாளர் சிவானந்தம் முன்னிலை வகித்தார். விகோப் டெக்ஸ் தலைவர் யுனிவர்சல் நந்தகோபால், வி.ஜி.பி. வேலு, அரசு வழக்கறிஞர் அருள்முருகன், கிருஷ்ணசாமி, வஜ்ரவேல், சேலம் பாலன் உள்பட பலர் கலந்துகொண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

செங்குந்தர் சங்க நிர்வாகிகளும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com