ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் நகரில் கோவிந்த் தேவ்ஜி கோவிலில் ஹோலி திருவிழாக் கொண்டாட்டம்.
சென்னையில் கல்லூரி மாணவிகள் நடத்திய கரோனா விழிப்புணர்வுப் பேரணி.
ஆப்கானிஸ்தானில் காபூல் நகரில் அதிபர் அரண்மனையில் அதிபராகப் பதவியேற்ற அஷ்ரப் கனி (வலது), தலைமை நீதிபதி சயீத் யூசுப் ஹாலிம் (இடது).
கரோனா வைரஸ் எச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர்ந்து, இத்தாலியிலுள்ள மிலன் நகரில் பெரும்பாலான மதுக் கூடங்கள் மூடப்பட்டுவிட்டதால் வெறிச்சோடிக் கிடக்கும் இரவு வீதிகளில் ஒன்று.
துபை பங்குச் சந்தையிலுள்ள அலுவலகத்திலிருந்து வெளியேறுகிறார் அரபு வணிகர் ஒருவர். கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒன்பது நாடுகளுடன் வான்வழி, கடல்வழிப் போக்குவரத்தை முற்றிலும் நிறுத்திவிட்ட நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் பங்குச் சந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளன.