கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கிராம நிர்வாக அலுவலகத்தில் சாதிக் கொடுமை: கிராம நிர்வாக அலுவலர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பு! 

கோவை ஒட்டர்பாளையம் கிராமத்தில் கோபால்சாமி என்பவர் காலில் விழுந்து கிராம உதவியாளர் மன்னிப்பு கேட்கும் விடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

News image
கோபால்சாமியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் முத்துசாமி.
Updated On :7 ஆகஸ்ட் 2021, 12:03 pm

DIN

கோவை ஒட்டர்பாளையம் கிராமத்தில் கோபால்சாமி என்பவர் காலில் விழுந்து கிராம உதவியாளர் மன்னிப்பு கேட்கும் விடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இவை தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் ஒன்றியம் அருகே உள்ள ஒட்டர்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட கிராம நிர்வாக அலுவலகத்தில், ஒட்டர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோபால்சாமி என்பவர் தனது சொத்து விவரங்களுக்கான ஆவண சரிபார்ப்புக்காக கிராம நிர்வாக அதிகாரி கலைச்செல்வியை அணுகியுள்ளார். அப்போது ஆவணங்கள் சரியான முறையில் இல்லாததால் முறையான ஆவணங்களை கொண்டுவரும்படி கிராம நிர்வாக அதிகாரி கலைச்செல்லி கூறியுள்ளார். 

Story image

இதையடுத்து கோபமடைந்த கோபால்சாமி கிராம நிர்வாக அதிகாரி கலைச்செல்வியை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதனை கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் முத்துசாமி தடுக்க முயன்றுள்ளார். அப்போது போபால்சாமி முத்துசாமியின் சாதியைச் சொல்லியும்,   ஊரில் இருக்க முடியாது, வேலையை காலி செய்துவிடுவேன் என  தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியதுடன், காலில் விழுந்து மன்னிப்பு கேட்குமாறு கூறியுள்ளார். 

Story image

கோபால்சாமியின் மிரட்டலுக்கு பயந்த முத்துசாமி, மேசை மீது அமர்ந்திருந்த கோபால்சாமியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து மன்னித்து விட்டதாகவும் எழுந்திரு, தன் மீதும் தவறு இருப்பதாக கோபால்சாமி கூறும் விடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இவை தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

YouTube video thumbnail

இந்த நிலையில் கோபால்சாமி அன்னூர் காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அதிகாரியின் உதவியாளர் முத்துசாமி தன்னை தாக்கியதாக புகார் அளித்துள்ளார். 

Story image

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த உதவியாளர் முத்துசாமியை, கோபால்சாமி சாதியைச் சொல்லி திட்டியதுடன் மன்னிப்பு கேட்குமாறு மிரட்டியதாக கூறப்படும் நிலையில், சாதிய வன்கொடுமை தொடர்பான புகார் எதுவும் தற்போது வரை பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விடியோ சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து மாவட்ட ஆட்சியர்,  மாவட்ட வருவாய் அலுவலர்,  காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் இது குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து அரசு விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அலுவலகங்கள், கல்விக் கூடங்களில் நடக்கும் சாதிய வன்கொடுமைகளை தடுக்க வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் அரசுக்கு வலியுறுத்தி உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.