டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

தில்லி எல்லைகளில் இணைய சேவை துண்டிப்பு: நாளை(பிப்.2) வரை நீட்டிப்பு

விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வரும், காஜிப்பூா், சிங்கு, டிக்ரி எல்லைகளில், மேலும் இரண்டு நாட்களுக்கு இணைய சேவை முடக்கத்தை மத்திய உள்துறை அமைச்சகம் நீட்டித்துள்ளது.

News image
தில்லி எல்லைகளில் இணைய சேவை துண்டிப்பு: நாளை(பிப்.2) வரை நீட்டிப்பு
Updated On :1 பிப்ரவரி 2021, 9:29 am

ANI

விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வரும், காஜிப்பூா், சிங்கு, டிக்ரி எல்லைகளில், மேலும் இரண்டு நாட்களுக்கு இணைய சேவை முடக்கத்தை மத்திய உள்துறை அமைச்சகம் நீட்டித்துள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து தலைநகா் தில்லியின் எல்லைப் பகுதிகளான சிங்கு, டிக்ரி, காஜிப்பூா் பகுதிகளில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாகப் போராட்டம் நடத்தி வருகிறாா்கள்.

தில்லியின் எல்லைப் பகுதிகளில் நிலவும் பதற்றமான சூழலைத் தடுக்கும் வகையில், பொது அவசரநிலை, பொது பாதுகாப்பு சட்ட விதிகளின் கீழ் இப்பகுதிகளில், ஜனவரி 29ஆம் தேதி முதல் இணைய சேவையை மத்திய உள்துறை அமைச்சகம் முடக்கியது.

இந்நிலையில் இன்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 

தில்லி எல்லைகளான காஜிப்பூா், சிங்கு, டிக்ரி பகுதிகளில் பிப்ரவரி 2ஆம் தேதி நள்ளிரவு 11 மணி வரை இணைய சேவை முடக்கமானது நீட்டிக்கப்படுகிறது என்று அறிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.