அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

புதுச்சேரி: 4 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர்

புதுச்சேரியில் பிரதமர் நரேந்திர மோடி புதிதாக 4 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

News image
நலத்திட்டங்களைத் தொடக்கி வைக்கும் பிரதமர் நரேந்திர மோடி
Updated On :25 பிப்ரவரி 2021, 6:41 am

DIN

புதுச்சேரியில் பிரதமர் நரேந்திர மோடி புதிதாக 4 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

தில்லியிலிருந்து தனி விமானம் மூலம் காலை 10.20 மணியளவில் பிரதமர் சென்னை வந்தார். பின்னர் சென்னையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரி சென்றடைந்தார். அவருக்கு புதுச்சேரி  துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வரவேற்பளித்தார்.

பின்னர் ஜிப்மர் மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பல்வேறு  நலத்திட்ட உதவிகளைத் தொடக்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.

ரூ. 4,000 கோடி அளவிலான திட்டங்கள் தொடக்கம்

ரூ.2,426 கோடி  மதிப்பில் சட்டநாதபுரம் - நாகை இடையிலான என்.எச். 45-ஏ என்ற தேசிய நெடுஞ்சாலைப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

ஜிப்மர், காரைக்கால் வளாகத்தில் ரூ.491 கோடி மதிப்பிலான புதிய வளாகம் கட்டுவதற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

சாகர் மாலா திட்டத்தின் கீழ் ரூ.44 கோடியில் புதுச்சேரியில் சிறிய துறைமுகம் அமைக்கவும், இந்திரா காந்தி விளையாட்டுத் திடலில் ரூ.7 கோடியில் 400 மீட்டரில் செயற்கை ஓடுதளம்அமைக்கவும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். 

ஜிப்மரில் ரத்த சேமிப்பு மையம் திறப்பு

ஜிப்மரில் ரூ. 28 கோடியில் கட்டப்பட்டுள்ள ஆய்வுக்கூடம் மற்றும் பயிற்சி மையத்துடன் கூடிய ரத்த மையம், மகளிர் விளையாட்டு வீரர்களுக்காக இந்திய விளையாட்டு ஆணையத்தால் லாசுப்பேட்டையில் ரூ. 11.85 கோடியில் கட்டப்பட்ட 100 படுக்கைகளுடன் கூடிய மகளிர் விடுதி, புதுச்சேரி கடற்கரை சாலையில் ரூ. 14.83 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட மேரி கட்டடம் ஆகியவற்றையும் பிரதமர் திறந்து வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.