லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கிருஷ்ணகிரியில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆய்வு

கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். 

News image
கிருஷ்ணகிரியில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றை நடவு செய்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி.
Updated On :3 ஜூலை 2021, 9:00 am

DIN


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது, நீதிபதிகள், வழக்குரைஞர்கள் பங்கேற்ற கூட்டத்தில் அவர்  பேசியது:  மனித சக்தியை காட்டிலும் இயற்கை வலிமையானது என்பதை இந்தக் கரோனா தொற்று நமக்கு உணர்த்தியுள்ளது. இதிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். 

நீதித்துறையில் பணியாற்றுபவர்கள்  உள்ளிட்ட அனைவரும் ஒரு குடும்ப உறுப்பினர்கள் என்பதை உணர்ந்து இணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

தொடர்ந்து, மாவட்ட ஒருங்கிணைந்த வளாகத்தில் மரக்கன்றை நடவு செய்த அவர், மையப்படுத்தப்பட்ட தாக்கல் மையத்தை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் முதன்மை மாவட்ட நீதிபதி ஆர். கலைமதி, கூடுதல் மாவட்ட நீதிபதி ஆர். விஜயகுமாரி, மகளிர் விரைவு நீதிமன்ற அமர்வு நீதிபதி வி.ஆர். லதா, குடும்ப நல நீதிபதி எம். செல்வம், மோட்டார் வாகன தீர்ப்பாய சிறப்பு மாவட்ட நீதிபதி டி.வி. மணி, சிறப்பு சார்பு நீதிபதி எஸ். ராஜா மகேஷ்  முதன்மை குற்றவியல் நடுவர் ராஜசிம்மவர்மன், முதன்மை சார்பு நீதிபதி பி.கணேசன், கூடுதல் சிறப்பு நீதிபதி சி.குமார வர்மன்,  குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் - 2, நீதிபதி   பீட்டர் மற்றும் வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகள்  வழக்குரைஞர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.