ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மானாமதுரை சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்:  ஆடி மாதம் பிறப்பால் விலை அதிகரிப்பு

ஆடி மாதப் பிறப்பை முன்னிட்டு வழக்கமான விற்பனையை விட  ஆடுகளின் விற்பனை அதிகரித்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.

News image
மானாமதுரையில் வியாழக்கிழமை நடந்த சந்தையில் ஆடி மாத பிறப்பை முன்னிட்டு வழக்கத்தைவிட கூடுதலாக ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
Updated On :15 ஜூலை 2021, 9:04 am

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வியாழக்கிழமை காலை நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் ஆடி மாதப் பிறப்பை முன்னிட்டு வழக்கமான விற்பனையை விட  ஆடுகளின் விற்பனை அதிகரித்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.

ஆடி மாதம் பிறந்து விட்டாலே அம்மன் கோயில்களில் திருவிழா களைகட்டத் தொடங்கிவிடும். கிராமங்களில் ஆடி முளைக்கொட்டு உற்சவம் சிறப்பாக நடைபெறும்.

இந்த விழாக்களின் போது மக்கள் ஆடு, கோழிகளை தெய்வங்களுக்கு படையலிட்டு வழிபடுவது வழக்கம்.

YouTube video thumbnail

மேலும் ஆடிமாதம் பிறப்பின்போது ஆட்டு இறைச்சிக்கு கடும் கிராக்கி ஏற்படும். இதனால் ஆடி மாதத்தில் ஆடு, கோழிகளின் விலை வழக்கத்தைக் காட்டிலும் உயர்த்தி விற்கப்படும்.

மானாமதுரையில் ஒவ்வொரு வாரமும்  ஆட்டுச் சந்தை நடைபெறும். வியாழக்கிழமை தடையை மீறி நடந்த ஆட்டுச் சந்தைக்கு வழக்கமாக விற்பனைக்கு கொண்டு வரும் ஆடுகளைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் ஆடுகள் விற்பதற்காக கொண்டு வரப்பட்டன.

ஆடு வளர்ப்பவர்கள் வேன், பைக்குகள், ஆட்டோக்களில் ஆடுகளை ஏற்றிக் கொண்டு  பேரூராட்சி அலுவலகம் எதிரே சந்தை கூடும் இடத்திற்கு அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் வந்து கூடிவிட்டனர்.

இதனால் அந்த இடத்தில் ஆடுகள் விற்க, வாங்க வந்தவர்கள், வியாபாரிகள் என கூட்டம் அதிகமாக இருந்தது.

இவர்கள் கரோனா பரவல் பற்றி அச்சப்படாமல் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முகக் கவசம் அணியாமலும் ஆடு விற்பனையில் மும்முரமாக இருந்தனர்.

பேரூராட்சி நிர்வாகத்தினர் ஆட்டுச்சந்தை அனுமதி நடத்த இல்லை. கூட்டம் கூடக் கூடாது கலைந்து செல்லுங்கள். இல்லையென்றால் ஆடுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்வார்கள் என ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு செய்து கொண்டிருந்தனர்.

ஆனால் ஆடு விற்பனையில் ஆர்வமாக இருந்தவர்கள் இந்த அறிவிப்பை எல்லாம் கண்டுகள்ளவில்லை.  ஆட்டுச் சந்தையில் ஆடுகளின் விலையும் வழக்கத்தைக் காட்டிலும் உயர்த்தி விற்கப்பட்டது.

வெள்ளாடு, செம்மறி, குரும்பை என ஆடுகளின் வகைக்கும், அவற்றின் எடைக்கும் ஏற்றவாறு  விலைகளும் ரூபாய் 8000 முதல் ரூபாய் 35 ஆயிரம் வரை உயர்த்தி விற்கப்பட்டது.

ஆடுகளை வாங்குவதற்கு சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் சந்தையில் குவிந்திருந்தனர்.

மானாமதுரையில் காலை 5 மணியிலிருந்து 9 மணி வரை நான்கு மணி நேரம் நடைபெற்ற ஆட்டுச் சந்தையில்  பல லட்சம் ரூபாய்க்கு ஆடுகள் விற்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.