சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கணவருக்காக மது பாட்டில்கள் வாங்கிச் சென்ற மூதாட்டி!

கம்பம் கூடலூரில் கணவருக்காக மதுக் கடையில் வரிசையில் நின்று மது பாட்டில்களை வாங்கிச் சென்றார் வயதான பெண்மணி ஒருவர்.

News image
கூடலூரில் கணவருக்காக மதுக் கடையில் வரிசையில் நின்று மது பாட்டில்களை வாங்கிச் செல்லும் வயதான பெண்மணி.
Updated On :14 ஜூன் 2021, 9:33 am

DIN

கம்பம்:  கம்பம் கூடலூரில் கணவருக்காக மதுக் கடையில் வரிசையில் நின்று மது பாட்டில்களை வாங்கிச் சென்றார் வயதான பெண்மணி ஒருவர்.

தேனி மாவட்டத்தில் தமிழக, கேரள எல்லைப் பகுதிகளான கம்பம் கூடலூரில் பொது முடக்கத் தளர்வுகள் காரணமாக மக்கள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.

கூடலூர் பிரதான வீதியில் இரண்டு இளைஞர்கள் திங்கள் கிழமை இரண்டு குதிரைகளில் சவாரி செய்து நகர்வலம் வந்தனர். 

Story image

குதிரை சவாரி செய்த இளைஞர்கள் இரண்டு பேரும் முகக்கவசம் அணிய வில்லை, இதனால் ரோந்து வந்த போலீசார் அவர்களை நிறுத்தி முகக்கவசம் அணிய அறிவுறுத்தினர், பின்னர் குதிரைகளை அவர்களது இருப்பிடத்திற்கு ஓட்டிச் செல்லுமாறு தெரிவித்ததன் பேரில் அவர்கள் குதிரைகளை இருப்பிடத்திற்குக் கொண்டு சென்றனர்.

கூடலூர் பழைய பேருந்து நிலையம் அருகே திங்கள்கிழமை, நீண்ட இடைவேளைக்குப் பிறகு திறக்கப்பட்ட அரசு மதுபானக் கடையில் ஆண்களுடன் வரிசையில் நின்று  தன்னுடைய கணவருக்காக 5 மது பாட்டில்களை வயதான ஒரு பெண்மணி வாங்கிச் சென்றார்.

மதுக்கடை வரிசையில் பெண் நின்றிருப்பது வியப்பூட்ட, கணவருக்காகத்தான் மது வாங்கிச் செல்கிறார் என்பது மக்கள் கவனத்தை ஈர்த்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.