இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புஐபிஎல் முதல் ஆட்டம்: ஹைதராபாத் அணிக்கெதிராக பெங்களூரு அணி பந்துவீச்சு மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு - ஜவாஹிருல்லா (நாகை), அப்துல் சமது (மணப்பாறை) போட்டிசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

மீண்டும் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: தினசரி பாதிப்பு 54,069 ஆக அதிகரிப்பு; பலி 1,321ஆக குறைவு

நாட்டில் வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 54,069 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளன; 1,321 பேர் உயிரிழந்துள்ளனர். 

News image
Updated On :24 ஜூன் 2021, 4:39 am

DIN

புது தில்லி: நாட்டில் வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 54,069 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளன; 1,321 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: 

நாட்டில் கரோனா பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பா் 19-ஆம் தேதி ஒரு கோடியை கடந்தது. அடுத்த 136 நாள்களில், 2 கோடியை கடந்த நிலையில், அடுத்த 50 நாள்களில் மேலும் ஒரு கோடி பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு 3 கோடியை கடந்துள்ளது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை 42,640-ஆக இருந்த தினசரி பாதிப்பு, புதன்கிழமை 50,848 -ஆக அதிகரித்தது. வியாழக்கிழமை காலை வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 54,069 -ஆக அதிகரித்துள்ளது.

7-ஆவது நாளாக அன்றாட புதிய பாதிப்புகள் ஒரு லட்சத்துக்கும் கீழ் பதிவாகியுள்ளது. நாட்டில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 83 நாள்களுக்குப் பிறகு 6,27,057-ஆக குறைந்துள்ளது. 

தொடா்ந்து 42-ஆவது நாளாக, புதிய பாதிப்புகளைவிட தினசரி குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை மொத்தம் 2,89,94,855 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். ஒரே நாளில் 68,817 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். 

தொற்று பாதிப்புக்கு 24 மணி நேரத்தில் 1,321 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,91,981-ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 18,59,469 பரிசோதனைகளும், இதுவரை மொத்தம் 39,78,32,667 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 30,16,26,028 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.