எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பிரேசில்: 5 லட்சத்தைக் கடந்தது கரோனா பலி

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 1,893 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

News image
பிரேசிலில் 5 லட்சத்தைக் கடந்தது கரோனா பலி
Updated On :30 ஜூன் 2021, 4:24 am

DIN


பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 1,893 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: 

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 1,893 போ் பலியாகினா். இதையடுத்து, நாட்டின் ஒட்டுமொத்த கரோனா பலி எண்ணிக்கை 5,15,985-ஆக அதிகரித்துள்ளது.

இதுதவிர, புதிதாக 64,903 பேருத்து கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன், நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 18,513,305-ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் 9.66 கோடிக்கும் அதிகமானோருக்கு முதல் தவணை தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன, மேலும் 2.53 கோடி மக்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளது. 

உலகில் கரோனா தொற்றுக்கு அதிகயளவில் உயிரிழந்தவர்களில் பட்டியலில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பிரேசில்  உள்ளது. இந்தியா தொடர்ந்து மூன்றாவது இடத்தில் உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.