பல்கலைக்கழக துணை வேந்தர்களுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நாளை (ஜூலை 1) ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
பருவத்தேர்வு மற்றும் நிர்வாக செயல்பாடுகள் தொடர்பாக தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மாநிலம் முழுவதும் உள்ள 13 பல்கலைக் கழக துணை வேந்தர்களுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்கலைக் கழகங்களில் காலியாக உள்ள பேராசிரியர்கள் மற்றும் இதர பணியிடங்களை நிரப்புவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.