எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

எழும்பூர் தொகுதியை ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு

எழும்பூர்(தனி) தொகுதியை தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் கட்சித் தலைமை அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
கோப்புப்படம்
Updated On :11 மார்ச் 2021, 12:32 pm

DIN

எழும்பூர்(தனி) தொகுதியை தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் கட்சித் தலைமை அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நடைபெற உள்ள சட்டபேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியின் சார்பில் ஜான் பாண்டியன் தலைமையிலான தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடுகிறது.

இந்நிலையில் புதன்கிழமை வெளியிடப்பட்ட 2ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் எழும்பூர் (தனி) தொகுதி ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

இதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எழும்பூர் தொகுதியை அதிமுகவிற்கே ஒதுக்க வேண்டும் எனக் கூறி அதிமுகவைச் சேர்ந்த தொண்டர்கள் வியாழக்கிழமை மாலை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

கூட்டணிக்குள் தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக எழுந்துள்ள அதிருப்திகள் தேர்தல் களத்தில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.