பாஜக ஆட்சிக்கு வந்தால் லவ் ஜிகாத்துக்கு எதிராக சட்டம் இயற்றப்படும் என கேரளத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
கேரள சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளன. இந்நிலையில் பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை திருவனந்தபுரத்தில் பாஜக வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், “ பாஜக அனைவருக்குமான நீதியை வழங்கும். தங்கக் கடத்தல் முறைகேடு தொடர்பாக விசாரித்து வரும் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது நீதி விசாரணை மேற்கொள்ள கேரள அரசு முடிவெடுத்துள்ளது. இதன்மூலம் அரசியலமைப்பின் கூட்டாச்சி தத்துவத்திற்கு கேரள அரசு சவால் விடுத்துள்ளது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “ கேரளத்தில் பாஜக ஆட்சியமைத்தால் சபரிமலையின் மரபுகள் மற்றும் பாரம்பரியத்தைக் காக்க சட்டம் இயற்றுவோம். மேலும் மாநிலத்தில் லவ் ஜிகாத்துக்கு எதிராக சட்டம் இயற்றி செயல்படுத்துவோம்” எனத் தெரிவித்தார்.
கேரளத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

07:07... ஹார்திக் பாண்டியாவின் வைரல் பதிவு..! சிஎஸ்கேவுக்கு வருகிறாரா?

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!

அம்பாசமுத்திரம் தொகுதி காலியானதாக அறிவிப்பு! 5 இடங்களுக்கு விரைவில் இடைத்தேர்தல்?

குவாலிஃபையர் 1: ஆர்சிபிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சு!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



