கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், அதிமுக வேட்பாளருமான என்.முருகுமாறன் முன்னிலையில் உள்ளார்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தனி தொகுதியில் தபால் வாக்குகள் எண்ணும் பணியானது ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் தொடங்கியது.
வாக்கு எண்ணிக்கை முதல் சுற்றில் அதிமுக வேட்பாளர் என்.முருகுமாறன், திமுக கூட்டணியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் எம்.சிந்தனைசெல்வனை விட 830 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.
என்.முருகுமாறன் (அதிமுக) - 3561
எம்.சிந்தனைசெல்வன் (விசிக) - 2731