தமிழகம் உள்பட நாடு முழுவதும் முகநூல், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் போன்ற இணையதள சேவைகள் தற்காலிகமாக முடங்கியது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக இரவு 9.10 மணி முதல் இணைய சேவைகளை வழங்கி வரும் முகநூல், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் செயலிகள் இயங்கவில்லை.
சுமார் 15 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்து வரும் இணைய சேவை செயலிகளின் முடக்கத்தால் இணையதள வாசிகள் கடும் பாதிப்புக்குள்ளாகினர். இந்த கோளாறு எப்போது சரிசெய்யப்படும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில் இது தொடர்பாக விளக்கமளித்துள்ள வாட்ஸ்ஆப் நிறுவனம், தொழில் நுட்ப கோளாறு சரி செய்யப்படும் என்று விளக்கம் அளித்துள்ளது.
பயனர்களுக்கு சேவைகளைத் தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் வாட்ஸ்ஆப் குறிப்பிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாலாஜாபாத் அருகே ஐம்பேரி தாங்கல் ஏரி ரூ. 5.26 லட்சத்தில் சீரமைப்பு

நடப்பு 2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல்: ரூ.5.21 லட்சம் கோடியைக் கடந்தது!

வா்த்தகம்...வெளிநாடு வாழ் இந்தியா்களுக்காக புதிய வைப்புத் திட்டம்: 6.25% வரை வட்டி







